இடிதாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்…! முதலமைச்சர் அறிவிப்பு ..!

Published by
murugan

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் நேற்று  வைத்தூர் சுற்றுவட்டரத்தில் உள்ள விவசாயிகள் 20 பேர் தண்ணீர்பந்தல் பட்டி பகுதியில் வேர்க்கடலை பிடுங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக கூடாரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் திடீரென இடி விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி , லட்சுமி அம்மாள் , சாந்தி ஆகிய மூன்று பெண்கள் இறந்தனர்.
மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் விஜயா என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்த மருத்துவமனைக்கு விரைந்து வந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி  படுகாயம் அடைந்தவர்களை சென்று பார்வையிட்டார். அப்போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கூறினார்.
மேலும் பெரம்பலுர் அருகே இரண்டு பேர் இடி தாக்கி உயிர் இழந்து உள்ளனர்.இந்நிலையில்   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இடி தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தாருக்கு தலா 4 லட்சம் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago