ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால், தமிழகத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாராக பணியாற்றி வந்தவர், வேல்முருகன். 40 வயதாகும் இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துக்கொண்டே வந்தநிலையில், இன்று அதிகாலை வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார் . மேலும் கொரோனாவால் உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் ஊடக நண்பர்கள் செய்தி சேகரிக்க செல்லும் போது பாதுகாப்பாக செல்ல முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…