ரம்மி நேரில் விளையாடும் போது திறமைகக்கான விளையாட்டு.! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்.!

Published by
மணிகண்டன்

ஆன்லைன் விளையாட்டுக்கள், ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து பலர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை தடுக்க தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை கொண்டுவந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன்ல விளையாட்டு கூட்டமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு  வழக்குகளை தொடர்ந்தன.

இந்த வழக்குகள் சென்னை தலைமை நீதிபதி அமர்வு முன்பு கடந்த மாதம் ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த மட்டுமே மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. அதனை தடை செய்ய அதிகாரம் இல்லை என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

அதேபோல் ஒரு சிலர் ஆன்லைன் விளையாட்டுக்களில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த விளையாட்டை தடை செய்ய முடியாது என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வாதிட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று (ஆகஸ்ட் 7) சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கின. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடும்போது பொது ஒழுங்கிற்கு இடையூறும் ஏற்படுத்துவதால் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என வாதிடப்பட்டது.

அதேபோல் ஆன்லைன் ரம்ம ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போது தான் அதனை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இதனை ஆன்லைன் வழியாக விளையாடும்போது அதை தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவியுடன் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விளையாட வைக்கப்படுகிறார்கள்.

இது எப்படி அறிவு சார்ந்த விளையாட்டாக பார்க்கப்படும்.? இது குறித்து ஆன்லைன் நிறுவனங்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை. மேலும் ஆன்லைன் விளையாட்டுக்கான பணம் முழுவதையும் பெற முடியாது. இதன் ஒரு பகுதி நிறுவனத்திற்கு செல்கிறது என்று வாதிடப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

6 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

7 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

9 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

10 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

11 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

11 hours ago