ஆதியோகி சிவன் சிலை முன்பு 7 உபாசகர்களால் நடத்தப்பட்ட ‘சப்தரிஷி ஆரத்தி’..!

Published by
Edison

கோவை:அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு ஆதியோகி சிவன் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் நேற்று (டிச 23) சப்தரிஷி ஆரத்தியை சிறப்பாக நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்,ஈசாவில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு சிலைக்கு,சக்தியளிக்கும் விதமாக,யோகேஸ்வர லிங்கத்தை,சப்தரிஷிகளின் உருவங்களுடன் சத்குரு பிரதிஷ்டை செய்து உள்ளார்.இதனையடுத்து,வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சப்தரிஷி ஆரத்தியானது,அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது .

இந்நிலையில்,அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (டிச 23) ஆதியோகி சிவன் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் சப்தரிஷி ஆரத்தியை சிறப்பாக நடத்தினர்.இதற்காக,அவர்கள் 7 பேரும் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து ஈஷாவிற்கு வருகை தந்தனர்.

அதன்படி,சப்தரிஷி ஆரத்தியின்போது யோகேஷ்வர லிங்கத்தை 7 உபாசகர்களும் சுற்றியமர்ந்து சந்தனம்,வில்வம்,புனித நீர்,மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து,பின்னர் மந்திரங்கள் கூறி சப்தரிஷி ஆரத்தி நடத்தினர்.மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை 8 மணி வரை நிகழ்ந்த இந்த செயல்முறை சக்தி நிலையில் பிரம்மாண்ட தன்மையை அந்த தருணத்தில் உருவாக்கியதாக கூறப்படுகிறது.

 

இந்த சப்தரிஷி ஆரத்தியானது சிவன் தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள், அவரது அருளைப் பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறையாகும்.

சப்தரிஷி ஆரத்தியின் முக்கியத்துவம் என்பது,அகஸ்தியர் உள்ளிட்ட சப்தரிஷிகள்,யோக விஞ்ஞானத்தை பரப்ப உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றதகவும்,செல்வதற்கு முன், ‘சிவனை இனி நேரடியாக காண முடியாதே’ என்ற ஏக்கத்தை அவரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இதனால்,சிவன் இந்த சப்தரிஷி ஆரத்தி என்னும் செயல்முறையை வழங்கி,அதன் மூலம் தன் இருப்பையும்,அருளையும்  உணர்த்துவதற்கு வழிவகுத்தார் என்று நம்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

2 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

2 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

3 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

4 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

4 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

4 hours ago