சசிகலா வருகை: பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் – வானதி சீனிவாசன்

Published by
பாலா கலியமூர்த்தி

சசிகலா வருகை அரசியல் களத்தில் வ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் விடுதலைக்கு முன்பாகவே சசிகலாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விடுதலைக்கான ஆவணங்களை வழங்கினர்.

11 நாட்கள் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, சசிகலா ஒருவாரம் ஓய்வுக்காக பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டிற்கு தனது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு பயணம் செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் பேசும் பொருளாக உருவெடுத்தது. பின்னர் அதிமுக கொடியை பயன்படுத்தியதால், அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.

ஓய்வுக்கு பிறகு இன்று காலை பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட்டார். அப்போது தமிழக எல்லையான ஓசூர் அருகே தனது காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்படாததாக கூறப்படுகிறது. பின்னர் வேறு காருக்கு மாறிய சசிகலா, அந்த காரில் அதிமுக கொடியுடன் தமிழகம் எல்லைக்கு வந்தடைந்தார். சசிகலாவை வழியெங்கும் ஏராளமான தொண்டர்கள் வரவேற்றனர்.

இந்நிலையில், சசிகலா வருகை தமிழக அரசியலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் வரவுள்ளதால் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று தமிழகம் வரும் சசிகலா அடுத்தடுத்து அரசியல் களத்தில் என்ன செய்ய போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

6 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

7 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

7 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

8 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

8 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

10 hours ago