மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் தமிழக அரசின் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு விழாவினை அமைச்சர் செல்லூர் ராஜூ குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்,துவக்கி வைத்த பின்னர் பேசிய அமைச்சர் தமிழகத்தில் 37 மாவட்டங்களை சேர்ந்த 8 ஆயிரம் மாணவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு என்று 13 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பங்கு பெறும் மாணவர்கள் அனைவருக்கும் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது மாணவப்பருவக் காலங்களில் இத்தகைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டால் தனிமனித ஒழுக்கம் ஆனது வளர்கிறது. ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நானே இருக்கின்றேன் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு மட்டுமே 168 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் தென்னிந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…