Semman Quarry Case [file image]
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சியாக தன்னையும் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக, ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டது. எனவே, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியாக அப்போது கனிம வள அமைச்சராக இருந்த பொன்முடி உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஜெயலலிதா நகை விவகாரம் – சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்த சூழலில் அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியம் அளித்து வருவதால், அரசு வழக்கறிஞர்களுக்கு உதவியாக செயல்பட தன்னையும் வழக்கில் இணைக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 8ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்பு நடைபெற்ற விசாரணையில், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்க கோரி ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதுபோன்று, ஜெயக்குமார் மனுவை தள்ளுபடி செய்யும்படி அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதனைத் தொடர்ந்து, நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், செம்மண் குவாரி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சியாக தன்னையும் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம்.
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…