[file image]
செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இன்று அதிகாலை தொடங்கிய இருதய அறுவை சிகிச்சை நிறைவு.
சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுமார் 5 மணி நேரமாக நடந்து வந்த இருதய அறுவை சிகிச்சை நிறைவு பெற்றது. காவேரி மருத்துவமனையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் தொடங்கிய இருதய அறுவை சிகிச்சை (பைபாஸ் சர்ஜரி) நிறைவடைந்தது. இருதய அறுவை சிகிச்சையை நிபுணர் ரகுமான் தலைமையிலான மருத்துவக்குழு, செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற பின் தற்போது செந்தில் பாலாஜி வார்டுக்கு மாற்றப்பட்டார். செந்தில் பாலாஜி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் மயக்க நிலையில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்கள் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருப்பார் எனவும் தகவல் கூறப்படுகிறது.
இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக ஏற்கனவே மருத்துவக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் 90 நாட்கள் ஓய்வு தேவை என்று இதயநோய் சிகிச்சை நிபுணர் கூறியுள்ளார். முழுமையான இயல்புவாழ்க்கைக்கு திரும்ப 3 மாதங்கள் ஆகும். பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டபின் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…