செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

Published by
பாலா கலியமூர்த்தி

சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டது.

அமலாக்கத்துறை காவல் முடிந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அதற்கு சிகிச்சையும் பெற்று வருகிறார். புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

‘நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்ணுகின்றனர்’ – ஆளுநரின் கண்டனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில்…!

ஆனால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மருத்துவ காரணங்கள் கூறி ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு முறையீடு செய்து இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது விசாரணையை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பெல்லா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

5 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

6 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

6 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

7 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

7 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

9 hours ago