சென்னையில் அம்பத்தூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரகடம் முதலி தெருவில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சதீஷ் என்பவர் ஆயுர்வேத மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சென்டரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸ் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
சோதனையில் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தொழிலுக்கு பயன்படுத்திய 5 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். அதனையடுத்து அந்த இளம்பெண்களை போலீசார் மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்து விட்டனர். அதனையடுத்து மசாஜ் சென்டர் என்று கூறி பாலியல் தொழில் செய்த சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…