job [File Image]
புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் (ஆயுஷ்), மருந்து வழங்குநர் (ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதா), பல்நோக்கு பணியாளர்கள், (ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகிய பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிட விவரங்கள்
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
மருத்துவ அலுவலர் (Ayush) | 2 |
மருந்து வழங்குநர் (Dispenser) | 4 |
பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker) | 6 |
கல்வி தகுதி மற்றும் சம்பளம்
மருத்துவ அலுவலர் (Ayush) பணிக்கு தேவையான கல்வி தகுதி : Bachelor of Siddha Medicine and Surgery (or) M.D. (Siddha) | ரூ.34,000 |
மருந்து வழங்குநர் (Dispenser) தேவையான கல்வி தகுதி : Bachelor of Homeopathy Medicine and Surgery | தினக்கூலி ரூ.750 |
பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker) தேவையான கல்வி தகுதி : 8th Pass to 10th Fail | தினக்கூலி ரூ.300 |
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவம் புதுக்கோட்டை மாவட்ட வலைதளம் https://pudukkottai.nic.in இணையதள பக்கத்தில் இருக்கிறது. வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதனை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் புதுக்கோட்டை சித்த மருத்துவ அலுவலகத்தில் 18.07.2024 பாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
முகவரி
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை 622 001. தொலைபேசி என் 04322-220409
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வமாக வெளியிடபட்ட இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…