தமிழகம் பாதாளத்திற்கு சென்றதை உணர்ந்த மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளனர் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிச்சான்றிதழை பெற்றுக்கொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றிக்கு வழி வகுத்துக்கொடுத்த அனைவருக்கும் நன்றி. தமிழகம் பாதாளத்திற்கு சென்றதை உணர்ந்த மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளனர். எந்த நம்பிக்கையோடு இந்த பொறுப்பை எங்களுக்கு மக்கள் கொடுத்திருக்கிறார்களோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து பணியாற்றுவோம்.
அண்ணா, கலைஞர் அவர்கள் பயிற்றுவித்த வழிநின்று மக்கள் கடமையாற்றுவோம். நாளை மறுநாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு சட்டமன்ற தலைவர் தேர்ந்தடுக்கப்படுவார். கொரோனா தொற்று காரணமாக பதவி ஏற்பு விழா எளிமையாக ஆளுநர் அலுவலகத்திலேயே நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…