பல்வேறு திருட்டில் ஈடுபட்ட பலே திருடனை தனிப்படை அமைத்து பிடித்த வட சென்னை எம்.கே.பி நகர் காவல்துறை….

Published by
Kaliraj

சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு மருந்து கடை ஒன்றில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது, பல்வேறு இடங்களில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை செய்ததாக காவல்துறையினரின் விசாரணையில் லொட்டை மதன் என்ற திருடன் ஒப்புக்கொண்டுள்ளான். வடசென்னையின் பிரதான  பகுதிகளான புளியந்தோப்பு, எம்.கே.பி நகர், ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பது போன்ற தொடர் திருட்டு சம்பவங்கள்  நடைபெற்று வந்தவன்னம் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எம்.கே.பி நகர் காவல் உதவி ஆணையர் திரு. ஹரிகுமார் அவர்கள், தனிப்படை ஒன்றை அமைத்து குற்றம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை வைத்து அந்த குற்றவாளியை தேடி வந்தனர்.

ஒரே வாரத்தில் 6 இடங்களில் தொடர் ...

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேடுதல் வேட்டையில், சென்னை ஓட்டேரி  சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த மதன் என்கிற லொட்டை மதனை (19) தனிப்படை காவல்துறையினர்  கையும் களவுமாக பிடித்தனர். காவலர்கள் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னையில்,  பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி, எம்கேபி நக,ர் வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனது திருட்டை அரங்கேற்றியுள்ளதாக ஒப்புக்கொண்டார். இந்த திருட்டுகளை தனியாகவும் தன், நண்பர்களோடும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் தாக்கியும் செல்போன் மற்றும் பணத்தை பறித்து வந்ததது தெரிய வந்தது. அதேபோல சென்னை வியாசர்பாடியில் உள்ள மருந்து கடை ஒன்றின்  பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை அவர்  செய்ததாக விசாரணையில் லொட்டை மதன் ஒப்புக்கொண்டார்.

மேலும், இவர் மீது வட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் ஒன்பதுக்கும் மேற்பட்ட கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இவரிடமிருந்து உயர் ரக திருட்டு இருசக்கர வாகனம், மூன்று கத்திகள், பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் ரொக்கப்பணம் 7 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.மேலும் இவருக்கு திருட்டில் உதவிய லொட்டை மதனின்  நண்பரான இட்டா விஜய் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

4 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

5 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

7 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

8 hours ago