சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருகையில் நிலவின் நிழல் பூமியின் மீது விழும் இந்த நிகழ்வுகள் சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இன்று காலை 8.07 மணி முதல் 11.16 வரை 3மணிநேரம் சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
தமிழ்நாட்டில் ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலும். அதே போல கேரளா கோழிக்கூடு பகுதியிலும், கர்நாடக மங்களூரு பகுதியிலும் இந்த கிரகணம் தெரியவரும் என கூறப்பட்டது.
அதேபோல, தமிழகத்தில் தமிழ் அறிவியல் இயக்கம் சார்பாக கடலூர் வெள்ளி கடற்கரையில் சூரிய கிரகணத்தை பார்க்க சிற்பபு ஏற்பாடு செய்யப்பட்டது. இதே போல தமிழகத்தில் 10 இடங்களுக்கும் மேலாக சூரிய கிரகணத்தை பொதுமக்கள் மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சிறப்பு வாய்ந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் கோவை, ஈரோடு, திருப்பூரில் 90 சதவீதத்திற்க்கும் மேலாக சூரிய கிரகணம் தென்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், கன்னியகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் பகுதி நேர சூரிய கிரகணம் தென்பட்டது. காங்கேயம், ஊட்டி, அவிநாசி, சென்னிமலை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் 3 நிமிடங்கள் வரை சூரிய கிரகணம் தென்பட்டது.
சிவகங்கை,காரைக்குடியில் 2 நிமிடங்கள் வரை தென்பட்டது. ஈரோட்டில் 1.20 நிமிடமும், மதுரையில் 20 வினாடியும் சூரிய கிரகணம் தென்பட்டது. 14 ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த வளைவு வடிவிலான சூரிய கிரகணம் காணப்படும்.
தமிழகத்தில் பல இடங்களில் தென்பட்ட இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பொதுமக்கள், மாணவர்கள் என பலர் அதற்குரிய கண்ணாடிகள், டெலஸ்கோப் ஆகிய கருவிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்த்தனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…