பேரதிர்ச்சி…தொடரும் நீட் மரணம்…வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

Published by
Edison

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தற்கொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

இதற்கிடையில்,சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் என்பவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில்,இந்த முறை நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து,அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி 12ஆம் வகுப்புத் தேர்வில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்று,நீட் தேர்வு எழுதிய நிலையில்,தேர்வில் தோற்று விடுவோமோ? என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர்கள் இருவரது மரணத்திற்கு முதல்வர் உள்பட பிற அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், தமிழக சட்டப் பேரவையில்,நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்,வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் கூலித் தொழிலாளர்களான திருநாவுக்கரசு மற்றும் ருக்மணி தம்பதியின் மகளான செளந்தர்யா என்ற 17 வயது மாணவி நீட் தேர்வு முடிவு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

18 minutes ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

1 hour ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

2 hours ago

கர்ப்பிணி பெண்தான் டார்கெட்… சிறுமி வன்கொடுமை வழக்கு குற்றவாளி சொன்ன ஷாக்கிங் தகவல்!

திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…

2 hours ago

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

14 hours ago