பேரதிர்ச்சி…தொடரும் நீட் மரணம்…வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

Published by
Edison

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தற்கொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

இதற்கிடையில்,சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் என்பவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில்,இந்த முறை நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து,அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி 12ஆம் வகுப்புத் தேர்வில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்று,நீட் தேர்வு எழுதிய நிலையில்,தேர்வில் தோற்று விடுவோமோ? என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர்கள் இருவரது மரணத்திற்கு முதல்வர் உள்பட பிற அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், தமிழக சட்டப் பேரவையில்,நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்,வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் கூலித் தொழிலாளர்களான திருநாவுக்கரசு மற்றும் ருக்மணி தம்பதியின் மகளான செளந்தர்யா என்ற 17 வயது மாணவி நீட் தேர்வு முடிவு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!

MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!

மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…

4 hours ago

அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?

சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…

5 hours ago

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

7 hours ago

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

7 hours ago

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

9 hours ago