இலங்கை அகதிகள் முகாம் -இனி “இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்” என பெயர் மாற்றம்;அரசாணை வெளியீடு…!

Published by
Edison

இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு முக்கிய திட்டங்களை நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து,நேற்று நடைபெற்ற சட்டப் பேரவை விவாதத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள், மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும்,இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது:

“தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழருக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும்.மேலும்,இலங்கை தமிழர் ஆதரவற்றவர்கள் அல்ல.மாறாக,அவர்களுக்கு நாம் இருப்போம்.அவர்கள் நலனில் அரசு உறுதுணையாக இருக்கும்”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம் என்பதை “இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ” என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த உத்தரவை,ஆளுநரின் ஆணைப்படி தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ளார்.

Recent Posts

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

18 minutes ago

”பிரதமரின் இமேஜை காக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” – ராகுல் காந்தி ஆவேசம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…

32 minutes ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை – ராஜுவுக்கு 4 நாள் போலீஸ் காவல்.!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…

48 minutes ago

எப்போது பார்த்தாலும் நேரு, இந்திரா காந்தி மீதுதான் தவறு என பழி போடுகின்றனர் – ஆ.ராசா காட்டம்.!

டெல்லி : நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ''திமுக எப்போதும் தேச ஒற்றுமையை…

2 hours ago

நெல்லை ஆணவக் கொலை: “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்” – மாரி செல்வராஜின் பதிவு.!

சென்னை : நெல்லை ஆணவக் கொலை "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

2 hours ago

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…

3 hours ago