எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமராஜர் ஆட்சியில் 1954-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பிறகு மக்களவை காங்கிரஸ் உறுப்பினராகவும் பணியாற்றிய எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்ட அய்யா திரு. எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் இன்று. அய்யா அவர்கள் 1952 முதல் திமுகவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். வன்னிய சமுதாயப் பெருமக்கள் அய்யாவுக்கு சிலை வைக்க சென்னையில் இடம் கோரிய போது, “இடம் மாத்திரமல்ல; சிலையும் அரசின் சார்பிலேயே நிறுவப்படும்’ என்று வெண்கலச் சிலையை 1996-இல் கிண்டியில் அமைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்
இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினேன்.மேலும், 1969-ல் ஏ.என். சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இருந்த 25% இட ஒதுக்கீட்டை 1971-ல் 31% உயர்த்தியதும், பிறகு வன்னியர் மக்களின் கோரிக்கையை ஏற்று போராட்டம் ஏதும் இல்லாமலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கியதும் திமுகதான். அய்யா எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பணிகளை நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்கிறேன் அவர் புகழ் நீடுழி வாழ்க என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…