மாணவர்களின் பாதுகாப்போடு விபரீத விளையாட்டு நடத்தாமல், 11 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பிற்கும் மார்ச்.,31 வரை விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் 10வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதே போல் மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்தபடி நடைபெறும் என்று தமிழக அரசு தற்போது கூறியுள்ளது.இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா?மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்.”என்று தனது ட்விட்டர் பதிவில் கூறி உள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…