மாணவர்களின் பாதுகாப்போடு விபரீத விளையாட்டு நடத்தாமல், 11 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பிற்கும் மார்ச்.,31 வரை விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் 10வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதே போல் மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்தபடி நடைபெறும் என்று தமிழக அரசு தற்போது கூறியுள்ளது.இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா?மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்.”என்று தனது ட்விட்டர் பதிவில் கூறி உள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…