ஸ்டாலின் நல்லது நினைப்பது இல்லை; அதனால் அவருக்கு நல்லது நடப்பது இல்லை என முதல்வர் தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் , மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தற்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழக முதல்வர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய், உண்மையை பேசுவதில்லை . அரசு கட்சி மற்றும் நமது கூட்டணி கட்சி தலைவர்களை பற்றி விமர்சனம் வைப்பது இதுதான் அவரது வாடிக்கை. திமுக ஆட்சியில் மக்களுக்கு செய்ததை சொல்லமாட்டார்.
ஏனென்றால் மக்களுக்கு செய்தால்தான் சொல்லுவதற்கு, எதையும் செய்யவில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் நல்லது நினைப்பது இல்லை; அதனால் அவருக்கு நல்லது நடப்பது இல்லை என தெரிவித்தார்.
அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…
திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…
கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…
சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…