கோவையில் 17 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்பு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணியை தொலைபேசியில் தொடர்புகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த வீட்டு உரிமையாளரை உடனே கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் வைக்கும் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்றித் தரவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கவும், அவர்களுக்கு அரசுப் பணியில் உரிய வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்கவும் வேண்டும்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சித் தலைவர், “சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…