முந்தைய காலத்தில் ஏற்பட்ட தவறுகளுக்காக ஸ்டெர்லைட் குற்றவாளியாக்க முடியாது -ஸ்டெர்லைட் தரப்பில் வாதம்.!

Published by
murugan
  • ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை  இன்று முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
  • முந்தைய காலத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் தவறுகளுக்காக தற்போது ஸ்டெர்லைட் நிறுவனத்தை குற்றவாளியாக்க முடியாது என ஸ்டெர்லைட் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராட்டம் நடைபெற்றது. போரட்டம் வன்முறை வெடித்தது இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர்.

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும்  திறக்க அனுமதி கொடுத்தது.

பின்னர் உச்சநீதிமன்றதில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கொடுத்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மனு  தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்  சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.

இதை அடுத்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு 28 நாட்கள் விசாரணை நடத்தியது. இந்நிலையில்  கடந்த செப்டம்பர் மாதம் முதல் நீதிபதி சிவஞானம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வந்ததால் ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை நடைபெறாமல் இருந்தது.

இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாகவும்  இந்த வழக்கை இன்று முதல் 20-ம் தேதி வரை விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது , மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடும்படி நீதிமன்றம்தான் உத்தரவிட முடியும். முந்தைய காலத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் தவறுகளுக்காக தற்போது ஸ்டெர்லைட் நிறுவனத்தை குற்றவாளியாக்க முடியாது என ஸ்டெர்லைட் தரப்பில் வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெறும் என நீதிபதிகள் கூறினர்.

 

Published by
murugan

Recent Posts

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…

8 minutes ago

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி நாளை அறிமுகம் – என்.ஆனந்த் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…

22 minutes ago

“மன்மோகன் சிங்கிடம் இருந்து பணிவை கற்றுக் கொள்ளுங்கள்” – திமுக எம்.பி. கனிமொழி.!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…

39 minutes ago

காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்.., யார் பொறுப்பு? அமித் ஷா பதவி விலகுவாரா? – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…

57 minutes ago

தமிழன் கங்கையை வெல்வான் – மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரை!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…

1 hour ago

கவின் கொலை வழக்கு : சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் சஸ்பெண்ட்!

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

3 hours ago