மதுரையில் தனியார் மருத்துவமனைகளை உடனடியாக திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் , ஊரடங்கு தளர்வுடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை தலைநகர் சென்னையில் கொரோனா தனது கோரமுகத்தை காட்டி வந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் செங்கல்பட்டு , திருவள்ளூர், வேலூர், மதுரை போன்ற சில மாவட்டங்களில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது.
இந்நிலையில், மதுரையில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில், பொதுமுடக்கம் காரணமாக அனைத்து கடைகளும் திறக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் திறக்காமல் உள்ளதால், சாதாரண நோய்களுக்கு கூட சிகிச்சை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பலர் குற்றச்சாட்டி உள்ளனர்.
இந்த குற்றசாட்டை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வினய் ஆய்வை மேற்கொண்டார். அப்போது, 120 தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனைகளை உடனடியாக திறக்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவமனைகளை திறக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுத்தார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…