திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் போட்டியிட 2-வது முறையாக தூசி மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வருகின்ற சட்டமற்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியனும், அதிமுக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகனும் விருப்பமனு தாக்கல் செய்தனர். ஆனால், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் செய்யாறு தொகுதியில் போட்டியிட தூசி மோகனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முக்கூர் சுப்ரமணியன் ஆதரவாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் தூசி மோகனை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக செய்யாறு தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும். முக்கூர் சுப்ரமணியனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும் வேறு ஒரு வேட்பாளரை அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும், “வேறு வேட்பாளரை அறிவித்தால் வெற்றி நிச்சயம்” என்ற பதாகைகளையும் கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட தூசி மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…