[file image]
தமிழகத்தில் டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்று மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடைபெறும் என அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
அதன்படி, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதி முதல் டிச.22ம் தேதி வரையும், 6 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர்.11-ஆம் தேதி முதல் டிச.21 ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்புக்கு மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரையாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!
இதனிடையே, தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதன்படி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி, ஏப்ரல் 8-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
மேலும், 11-ஆம் வகுப்புக்கு மார்ச் 4ல் தொடங்கி 25ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். இதுபோன்று, மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி, 22ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மே மாதத்தில் 10ம் தேதி முதல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…