மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பள்ளிக்கு வரலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் பூட்டப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பி திறக்கப்படவில்லை. சில பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டாலும், ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்வது முறையாக இல்லை என்பதால் பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் வரும்படியாக தற்பொழுது ஆலோசனை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக மாணவர்கள் எப்படி பள்ளிக்கு வரவேண்டும், பள்ளிக்கூடம் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைமுறை அண்மையில் கூறப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் வரவேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், மாணவர்கள் கல்வி சிறக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இருப்பினும் விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…