மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்தாக அமைச்சர் தகவல்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த அனைத்து கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. அவ்வாறு மீண்டும் திறக்கப்பட உள்ள கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறது.
இதில், அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் போட்டு இருக்க வேண்டும். அப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டியிருந்தது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செப்டம்பர் 1-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கட்டாயம் விடுதிகளில் உள்ள மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வந்து விட்டு செல்லவேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை அரசு மற்றும் கல்லூரி நிர்வாகம் செய்யும் எனவும்கூறினார். அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசும்போது, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…