பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஆனால் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் அவரை கைது செய்யவில்லை.சுபஸ்ரீ தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் ஜெயகோபாலை கைது செய்யாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.இதன் பின்னர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை தீவிரமாக தேடி வந்த நிலையில் ஓசூர் அருகே தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.இந்த நிலையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக பழனி(50), சுப்பிரமணி(50) சங்கர்(35), லட்சுமிகாந்த்(38) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் 4 பேரும் பேனரை வைத்ததாக கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட ஜெயகோபாலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கைது என தகவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.4 பேரை கைது செய்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…