நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே என்.எல்.சி வித்யா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக நிலக்கரியானது முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு வழக்கமாக செல்லும். அப்போது பெல்ட் செல்லும் பாதையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பின்னர் தீயானது கன்வேயர் பெல்ட்டில் சுமார் 100 மீட்டர் அளவிற்க்கு பரவியுள்ளது. இதையடுத்து என்.எல்சி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விரைவாக வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…