ஆவின் டேங்கர் லாரிகள் திடீர் வேலைநிறுத்தம் ! தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர நடவடிக்கை

Published by
Venu

 நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ,பாலை தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று  பால்வளத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் பால் சப்ளை செய்து வருகிறது.ஆவின் பால் டேங்கர் லாரிகளை இயக்குவதற்கான, ஒப்பந்தம், கடந்த 2018-ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது.ஆனால் அரசு ஒப்பந்தத்தை  நீட்டிக்கவில்லை . மேலும் முறைகேடு புகாரில் சிக்கிய நிறுவனம் ஒன்றிற்கு முழு ஒப்பந்ததையும் வழங்கப்போவதாக தகவல் வெளியாகி வந்தது.

எனவே  இதனை கண்டித்து  நள்ளிரவு முதல்   ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.இந்நிலையில்  மாவட்ட துணை பதிவாளர்கள், பொது மேலாளர்களுக்கு பால்வளத்துறை ஆணையர் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.அதாவது,அனைத்து இடங்களிலும் தடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .சென்னை பண்ணைகளுக்கு தேவையான பாலை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Published by
Venu

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago