உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் – உச்சநீதிமன்றம்

Published by
லீனா

உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் அனல்மின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் விதிகளை கடைபிடிக்கவில்லை எனக்கூறி,  தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை காளிமுத்து என்பவர் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்ட 1,342 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்கள் என்றும், எந்த பொது விசாரணை நடத்தப்படவில்லை என்றும்,  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு முறையாக நடத்தப்படவில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க வழங்கிய ஒப்புதல் முறையாக வழங்கப்படவில்லை என கூறி அதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தின் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையானது, இன்று உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் குமரன் மற்றும் நரசிம்மன் ஆகியோர் ஆஜராகி இருந்தார்கள்.

இதனையடுத்து, இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதால் மாதத்திற்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், அங்கு இருக்கக் கூடிய கருவிகள் மற்றும் பொருட்கள் பழுதடைந்து விடும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.  இதனை தொடர்ந்து, உததரவுகளை பிறப்பித்த நீதிபதி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், தொடர்ந்து அனல்மின்நிலையம் இயங்க அனுமதி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மனுதாரர் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சகம் பதிலளிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

7 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

8 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

8 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

9 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

9 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

10 hours ago