நாளை அரசு பேருந்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை.!

Talks will be held tomorrow with government transport workers on a wage agreement. MR Vijayabaskar participates.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஜனவரி 5-ஆம் தேதி நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

சென்னை குரோம்பேட்டை பணிமனையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்கிறார். கொரோனா விதிமுறை காரணமாக ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், புதிய பணி நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை தற்போது நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.