அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவை காட்டும் பயோமெட்ரிக் கருவியில் புதிதாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் ஆசிரியர் வருகைக்கான பயோமெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் இந்த முறையை கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் ஆங்கிலம் மொழி மட்டும் இருக்கும் வகையில் இருந்தது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் இருக்கும் பயோமெட்ரிக் கருவியில் இந்தி மொழி இருந்தது. இதற்க்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போன்று இனி தவறுகள் நடக்காது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அரசுப் பள்ளியில் இருக்கும் பயோமெட்ரிக் கருவியில் புதிதாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் கருவியில் தமிழ் உட்பட 9 மொழிகள் இருக்கும்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…