வரும் 13ல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், சற்று நேரத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் தொடக்கம்.
2021-22ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. அப்போது, திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு முதன் முறையாக தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மறுநாள், தமிழகத்தில் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
இதனிடையே நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியின் வருவாய், இழப்பு தொடர்பான வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், தமிழக சட்டசபை அலுவல் ஆய்வுக் கூட்டம், இன்று காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ளது.
சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற இருக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் ஆகஸ்ட் 13 இல் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது, மானிய கோரிக்கையை எப்போது வைத்துக் கொள்வது என்பதை முடிவு செய்வதற்காக ஆலோசனை நடத்தப்படுகிறது.
மேலும், இந்த கூட்டத்தில், முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல் முறையாக இம்முறை, ‘இ – பட்ஜெட்’ தாக்கல் (காகிதமில்லா) செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…