அடுத்த தலைமை செயலர் யார்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தின் புதிய தலைமை செயலர் யார் என தேர்ந்தெடுக்கும் ஆலோசனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். 

தமிழகத்தில் உச்சபட்ச அரசு பதவியாக கருதப்படும் தலைமை செயலாளர் பொறுப்புக்கு புதியதாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற ஆலோசனையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் , மூத்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது பொறுப்பில் இருக்கும் தலைமை செயலாளர் இறையன்பு இந்த மாதம் 60வயது பூர்த்தி அடைவதை அடுத்து வரும் 30ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். அதனால் அடுத்த தலைமை செயலாளர் யார் என முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த லிஸ்டில் 13 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இம்மாதம் தான் டிஜிபி சைலேந்திர பாபுவும் ஓய்வு பெற உள்ளார் என்பதும் குறிப்பிலிடத்தக்கது. யுபிஎஸ்சி தேர்வு செய்து அனுப்பும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளில் இருந்து ஒருவரை தமிழக டிஜிபியாக தமிழக அரசு தேர்வு செய்யும். அதற்கான ஆலோசனையும் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

46 seconds ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

41 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago