அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாய் ஷ்யாமளா கோபாலன் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவிற்கு சென்றபோது, ஜமைக்கா நாட்டை சார்ந்த ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 4 நாட்களாக நடைபெற்றது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270- தேர்தல் வாக்குகள் பெற வேண்டும். ஆனால், ஜோ பைடன் 290 -தேர்தல் வாக்குகளும், டிரம்ப் 214-தேர்தல் வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில், ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை அதிபராக தேர்வு கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இருவருக்கும் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் வெற்றியால் அவர் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளாதால், துளசேந்திரபுரம் கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், தங்கள் வீடுகள் முன் பெண்கள் கோலங்களை போட்டும் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். பெண்கள் போட்ட கோலத்தில் வணக்கம் அமெரிக்கா என இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…