தமிழ்நாடு முதலமைச்சரின் மின்னல் வேகப் பணி பாராட்டத்தக்கது – வரவேற்கத்தக்கது! – கி.வீரமணி

Default Image

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் – அவசரத் தேவையாகும் என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட்.

உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார்.

மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக  மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகப் போராக மாறும் பேரபாயம்! பேரபாயம்!! ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் – அவசரத் தேவையாகும்! தமிழ்நாடு முதலமைச்சரின் மின்னல் வேகப் பணி பாராட்டத்தக்கது – வரவேற்கத்தக்கது!’  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT