தமிழகத்துக்கு இது வேண்டவே வேண்டாம்… அண்ணாமலை பரபரப்பு பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் அன்போடு பாஜக ஆட்சிக்கு வரும்போது இந்து அறநிலையத்துறை என்ற அமைப்பே இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், இந்து அறநிலையத்துறையில் தொடர்ந்து கோயில்களில் கட்டணத்தொகையை அதிகரித்து வருவதால், பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருவதாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, தமிழகத்துக்கு அறநிலையத்துறையே வேண்டாம் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன்.

இதற்கு மேலும் ஒரு காரணமும் இன்று அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறை எதற்கு வேண்டும், கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவேண்டும் என்றால், அனுமதி வாங்கிக்கொண்டு வர சொல்லுறார்கள், குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டைக்கு அனுமதி கேட்டுக்குறார்கள். எல்இடி திரையில் நேரலையில் ஒளிபரப்ப செய்ய அனுமதி வேண்டுமென சொல்லுறாங்க, இதுபோன்று கோயில்களில் வழிபட எல்லாவற்றுக்கும் அனுமதி கேட்கப்படுகிறது.

புதுச்சேரியில் பரபரப்பு! திடீரென சரிந்து விழுந்த 3 அடுக்குமாடி கட்டிடம்!

இதனால் தான் நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்துக்கு தேவையில்லாத ஒரு அமைப்பு என்றால் அது இந்து அறநிலையத்துறை தான். அதனால், எங்களை பொறுத்தவரை நங்கள் தெளிவாக இருக்கிறோம். இதனை மக்கள் மன்றத்திலும் வைத்துள்ளோம். அதாவது, 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் அன்போடு பாஜக ஆட்சிக்கு வரும்போது, இந்து அறநிலையத்துறை இருக்காது. இதுதான் எல்லாவற்றுக்குமான பதில். எங்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அண்ணாமலை, 2024 நாடாளுமன்ற தேர்தல் தான் திமுகவுக்கு அழிவின் ஆரம்பம். இந்த ஆணவத்தின் ஆரம்பம் நாடாளுமன்றம் தேர்தல் தான். 2014ல் மோடி ஆட்சிக்கு வந்தபோது, திமுக படுதோல்வியை சந்தித்தது. இதுபோன்று வரும் நாடாளுமன்ற தேர்தல் திமுகவின் அழிவுனுடைய ஆரம்பமாக இருக்கும் என திமுகவை கடுமையாக விமர்சித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

1 hour ago

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

2 hours ago

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

3 hours ago

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

3 hours ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

4 hours ago

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

4 hours ago