மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்.. நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

Published by
பாலா கலியமூர்த்தி

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. 

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்க ரூ.4.50 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  500 பேருக்கு ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முதலமைச்சர் அறிவிப்பை அடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் பயனாளர்களை தேர்வு செய்வதற்கான நிபந்தனைகளும் வெளியிடப்பட்டுள்ளது.  இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் தவிர ஏனைய இருசக்கர வாகனங்களை இயக்க இல்லாதவர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருகால் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதாவது விபத்து மற்றும் இதர காரணங்களால் 60% க்கும் மேல் ஒருகால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போலியோவால் ஒருகால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


[Image Source : Twitter/@Nandhini_Twits]
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago