தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என்று பலரும் வேலை பார்த்து வருகின்றனர். இதில், இளம் மருத்துவர்களின் இழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பணியில் ஈடுபட்டு இறக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு வேலை வழங்குவதை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதை குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. கொரோனா பணியில் ஈடுபட்டு கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி வருவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
அப்போது, உயர்நீதிமன்றம் இழப்பீடு வழங்குவதோடு, கொரோனாவால் இறந்த தூய்மை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் இதன் விதிமுறைகளை தமிழக அரசே மேற்கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…