கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் போலீசார் தனிப்படை அமைத்து இந்த கொலையில் குமாரி மாவட்டத்தை சார்ந்த அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகளையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தால் வழக்கு குறித்து 15 நாளில் மத்திய உள்துறைக்கு தெரிவிக்கவேண்டும்.
மேலும் இந்த வழக்கை என்.ஐ .ஏ க்கு விசாரணைக்கு மாற்றும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. எனவே வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு என்.ஐ .ஏ க்கு அனுப்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து வில்சன் கொலை வழக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பிருக்கலாம் என கூறப்படுவதால் விசாரணையை என்.ஐ .ஏ ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று நாகர்கோவில் நீதிமன்றம் தீவிரவாதிகள் அப்துல் சமீம், தஃபீக்கை 28 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி இருவரையும் 10 நாள்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி கொடுத்து உள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…