தமிழக அரசின் பொது பாடத்திட்டம் – ஆளுநரின் கடித்ததால் புதிய சர்ச்சை!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அதாவது, தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சில் வகுத்துள்ள பொது பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என்று பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான அவரது கடிதத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர்களும், தன்னாட்சி கலை அறிவியல் முதல்வர்களும் தமிழக அரசின் பொது பாடத்திட்டம் குறித்து கவலை தெரிவிக்கின்றனர். புதிததாக பரிந்துரைக்கப்பட்ட பொது பாட திட்டம், தற்போதைய பாட திட்டத்தை விட பின்தங்கியது என்றும், இந்த பாட திட்டம் தேசிய அளவிலான தர நிர்ணயத்தில் இருந்து வெளியேறிவிடும் எனவும் கருதுகின்றனர்.

உயர்க்கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்வது மத்திய அரசின் அதிகாரவரம்பிற்குள் உள்ளதை கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக மானிய குழுவிடம் இதுதொடர்பாக கேட்கப்பட்டதாகவும் ஆளுநர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். உரிய பரிந்துரைகள், வழிகாட்டுதலை பின்பற்றி பல்கலைக்கழகம் அல்லது தன்னாட்சி கல்லூரிதான் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு தெளிவுபடுத்தி உள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

எனவே தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சில் வகுத்துள்ள பொது பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என கூறியுள்ளார். மேலும், பல்கலைக்கழக மானிய குழு தன்னாட்சி அதிகாரம்,  பொது பாடத்திட்டத்தை மாநில அரசு கொண்டுவர முடியாது. கல்வி பொது பட்டியலில் இருப்பதால் யுஜிசி விதிகளுக்கு எதிராக மாநில அரசு திட்டத்தை  செயல்படுத்த முடியாது எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொது பாடத்திட்டம் தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளருக்கும் ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆசிய தடகள போட்டி – தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா.!

கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…

13 minutes ago

கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!

சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…

29 minutes ago

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு.? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.!

சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…

49 minutes ago

நாளை திமுக பொதுக்குழுக் கூட்டம்.! இன்று மாலை பிரமாண்ட ரோடு ஷோ நடத்தும் மு.க.ஸ்டாலின்.!

மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம்…

1 hour ago

கடைசி வரை திக்..திக்.. குஜராத்துக்கு குட் பை! த்ரில் வெற்றிபெற்ற மும்பை!

நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…

9 hours ago

ஐயோ என்னங்க இதெல்லாம்? நடிகையின் குளியல் நீரில் சோப்…விலை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…

10 hours ago