உடல் நலக்குறைவு காரணமாக முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி மறைவு.. கலைஞர் கருணாநிதியின் நண்பரான இவர் அவர் மறைந்த இடத்திலேயே காலமானார்..

Published by
Kaliraj
  • உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா கோகுலகிருஷ்ணன் இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
  • இவரது இறுதி சடங்கு நாளை காலை நடைபெரும் என தகவல்.

இவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணியளவில்  காலமானார். இவர் தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார், பிறகு குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்தார். இவர் குஜராத் தலைமை நீதிபதியாக இருந்தபோது இரண்டு முறை அந்த மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்துள்ளார்.இவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவர், இவர் வரலாற்றுப் புகழ்பெற்ற பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும் ஆதரவாக வழக்கறிஞராகவும்  வாதாடியுள்ளார். இவருடைய மனைவி கடந்த 2005 ஆம் ஆண்டே காலமானார். இவருக்கு பி.ஜி. சுந்தரராமன், பி.ஜி. ராம்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இவரது  இறுதிச் சடங்குகள், 5, அண்ணா அவென்யு, பக்தவத்சலம் நகர் விரிவு, அடையாறு , சென்னை முகவரியிலுள்ள அவருடைய இல்லத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு நீதித்துறையில் ஒரு வடுவை ஏற்படுத்தும் என அனவரும் கருதுகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago