தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்ற தமிழ்நாடு அணி…அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!!

Published by
பால முருகன்

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 15-ம் தேதி முதல் 19 வரை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. இந்த, தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு அணி  9 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்களை பெற்று, 127 புள்ளிகளுடன் வெற்றிபெற்றது.

இந்நிலையில், தமிழ்நாடு அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் அவர் கூறியதாவது ” ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 15-ம் தேதி முதல் 19 வரை நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 9 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்களை பெற்று, 127 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு 7 வீரர்கள் தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி வெற்றி நடைபோடுவதற்கு உதாரணமாகத் திகழும் நம் வீரர் மற்றும்  வீராங்கனையருக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

32 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

36 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

48 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

1 hour ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

2 hours ago