இலவசத்திற்கு பின்னால் போனால் தமிழகம் வளர்ச்சி அடையாது – பிரேமலதா விஜயகாந்த்

Published by
பாலா கலியமூர்த்தி

மாணவர்கள் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதற்கு யார் காரணம்? இங்கு எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் 16வது ஆண்டு துவக்க விழாவையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினார். இவ்விழாவில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞர்கள் தான் நாளைய தமிழகம் என்றும் கடந்த இரண்டு நாட்களாக நீட் தேர்வுக்கு எதிராக 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

மாணவர்கள் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதற்கு யார் காரணம்? இங்கு எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது. தங்கள் அரசியல் வெற்றிக்கு செய்யப்படுகிறது. மூளைச்சலவை செய்து இளைஞர்கள் உயிரோடு விளையாடுவதை கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஊழல் செய்யும் நிலைதான் தற்போது உள்ளது. நிறையும், குறையும் நிறைந்த ஆட்சி அதிமுக ஆட்சியை பார்க்கிறோம். இலவசத்திற்கு பின்னால் போனால் தமிழகம் வளர்ச்சி அடையாது. மொழி, படிப்பு, சாதியை வைத்து அரசியல் செய்கின்றனர்.

மக்கள் வாய்ப்பு அளித்திருந்தால் கேப்டன் அறிவித்த திட்டங்கள் தமிழகத்தில் கிடைத்திருக்கும். இளைஞர்களே மாற்று அரசியலை நாம் உருவாக்க வேண்டும். இந்திய முழுவதும் ஒரே கல்வி முறை என்பதை தேமுதிக ஏற்றுக்கொள்ளும். நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்களை கொடுமைப்படுத்தும் கலாச்சாரத்தை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. 2021ல் மாபெரும் சக்தியாக தேமுதிக வரும். அனைவர்க்கும் ஒரே கல்வி என்பதை தேமுதிக வரவேற்கும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

20 minutes ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

56 minutes ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

3 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

3 hours ago

த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாள் : பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வாழ்த்து!

சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…

4 hours ago

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…ஏமன் ராணுவம் அறிவிப்பு!

சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…

5 hours ago