எல்லாருக்கும் எல்லாம்.. சமூகநீதி வழிப்பாதையில் திராவிட மாடல்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Published by
மணிகண்டன்

இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடபெற்றது. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி , பள்ளிக்கட்டடங்கள், சமுதாய கூடங்கள் என 32.95 கோடி ரூபாய் செலவீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

அதே போல, 138  கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதியதாக கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். மேலும்,தூய்மை பணியாளர், நலவாரிய அமைப்பினர் மற்றும் இருளர் சமூகத்தினருக்கு 943 வீடுகள் வழங்குதல், 726 பேருக்கு 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், பணி நியமன ஆணைகள் உள்ளிட்டவைகளை வழங்குதல் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் மு.க.ஸ்டாலின்.! திருச்சி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.! 

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் காட்டிய சமூக வழியில் நாம் பயணித்து வருகிறோம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நிர்வாக ரீதியில் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். சுந்திரம், சமூக நீதி, சமத்துவம் , சமதர்மம் ஆகிய பாதையில் திராவிட மாடல் அரசு இயங்குகிறது, மானுட நெறிகள் கொண்ட வழியில் நாம் ஆட்சி செய்து வருகிறோம் .

அதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்காக அயராது உழைப்பவர்களுக்கு விருதும் பரிசு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறோம். அம்பேத்கர் விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. ட்கோ மூலம் 10,000 பேருக்கு ரூ.152 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Recent Posts

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

28 minutes ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

50 minutes ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

13 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

13 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

14 hours ago