எல்லாருக்கும் எல்லாம்.. சமூகநீதி வழிப்பாதையில் திராவிட மாடல்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Published by
மணிகண்டன்

இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடபெற்றது. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி , பள்ளிக்கட்டடங்கள், சமுதாய கூடங்கள் என 32.95 கோடி ரூபாய் செலவீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

அதே போல, 138  கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதியதாக கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். மேலும்,தூய்மை பணியாளர், நலவாரிய அமைப்பினர் மற்றும் இருளர் சமூகத்தினருக்கு 943 வீடுகள் வழங்குதல், 726 பேருக்கு 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், பணி நியமன ஆணைகள் உள்ளிட்டவைகளை வழங்குதல் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் மு.க.ஸ்டாலின்.! திருச்சி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.! 

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் காட்டிய சமூக வழியில் நாம் பயணித்து வருகிறோம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நிர்வாக ரீதியில் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். சுந்திரம், சமூக நீதி, சமத்துவம் , சமதர்மம் ஆகிய பாதையில் திராவிட மாடல் அரசு இயங்குகிறது, மானுட நெறிகள் கொண்ட வழியில் நாம் ஆட்சி செய்து வருகிறோம் .

அதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்காக அயராது உழைப்பவர்களுக்கு விருதும் பரிசு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறோம். அம்பேத்கர் விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. ட்கோ மூலம் 10,000 பேருக்கு ரூ.152 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Recent Posts

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

9 minutes ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

50 minutes ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

2 hours ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

18 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

19 hours ago