தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கி 3ஆம் தேதி நடைபெற்றது.
27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சிகளில் 240 இடங்களில் அதிமுகவும், 271 இடங்களில் திமுகவும் வெற்றிபெற்றது. அதேபோல 5090 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 2199 இடங்களில் அதிமுகவும், 2356 இடங்களில் திமுகவும் வெற்றிபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களுக்கும் மாவட்ட ஊராட்சி தலைவர்(27), மாவட்ட ஊராட்சி துணை தலைவர்(27), ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்(314), ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர்(314), ஊராட்சி துணை தலைவர்(9624) ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10,306 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதில் நடைபெற்று முடிந்த ஊராட்சி தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள் வாக்களிக்க உள்ளனர்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…