டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.

தமிழகம், கேரளா மற்றும் ஐதராபாத்தில் டாஸ்மாக் மற்றும் மின்துறை அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கரூரில் அமைச்சரின் நண்பர் ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்று, கரூரில் உள்ள அமைச்சரின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், வெளிமாநிலங்களில் அமைச்சர் செந்தில் பபாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்றும், அதன்படி,  கேரளா, ஐதராபாத் மற்றும் பெங்களூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

37 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

1 hour ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago