பற்களை பிடுங்கிய விவகாரம்: காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து

Published by
Ramesh

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லை பிடுங்கி மிக கொடூரமாக துன்புறுத்தியதாக கடந்தாண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது தொடர்பாக பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலத்திற்கு, திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், சேரன்மகாதேவி துணை ஆட்சியர், கடந்த மார்ச் மாதம் தனது விசாரணையை தொடங்கினார்.

புதுச்சேரியில் பரபரப்பு! திடீரென சரிந்து விழுந்த 3 அடுக்குமாடி கட்டிடம்!

அதனைத் தொடர்ந்து பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து கடந்தாண்டு மார்ச் 29ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். ஏப்ரல் மூன்றாம் தேதி துணை ஆட்சியரின் இடைக்கால விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் பல்வீர் சிங்கின் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. 10 மாதங்களாக பல்வீர் சிங் இடைநீக்கத்தில் உள்ள நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பிற்கேற்ப பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Published by
Ramesh

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

6 minutes ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

34 minutes ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

59 minutes ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

1 hour ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

2 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

2 hours ago