ஏரல் அருகே தனியாக வசித்து வந்த 76 மூதாட்டியிடம் 14 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளது.
ஏரல் அருகே பண்டார விளை பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை இவருடைய மனைவி முத்துக்கிளி 76 வயதான இவருக்கு 6 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளார்கள் இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர் . செல்லத்துரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முத்துக்கிளி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
மேலும் இதனைநோக்கமிட்ட மர்ம நபர் நேற்று முன்தினம் மதியம் முத்துக்கிளி வீட்டிற்குள் சென்று கதவை தட்டினர் உடனே முத்துக்கிளி கதவை திறந்து வெளியே வந்தார் .அப்போது அங்கு நின்ற மர்ம நபர் தனது உடலை போர்வையை வைத்து போர்த்தி இருந்தார்.
மேலும் அவர் திடீரென முத்துக்கிளி கழுத்தில் அணிந்திருக்கும் மொத்தம் 20 பவுண்ட் மதிப்பிலான 2 தங்க சங்கிலிகளை பிடித்து இழுத்துள்ளார், உடனே சுதாரித்துக்கொண்ட முத்துக்கிளி நகைகளை கைகளால் இருக்கமாக பிடித்து திருடன் திருடன் என்று கூச்ச லிட்டுள்ளார் , மேலும் அப்போது அவரது இரண்டு நகைகள் ஒரு நகை மட்டும் அறுந்து துண்டானது மேலும் அதன் ஒரு பகுதியான 6 பவுன் நகை மட்டும் முத்துக்கிளி கையில் இருந்தது.
மற்றொரு 8 பவுன் தங்கச் சங்கிலியையும் அறுந்த ஒரு பகுதியான 6 பவுன் நகையும் பறித்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார் , அவரை அக்கம் பக்கத்தினர் விரட்டிச் சென்று பிடிக்கமுடியவில்லை இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர், மேலும் ஏரல் அருகே பட்டப்பகலில் மூதாட்டி நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…