நடிகர் சூர்யா மீது குறி வைக்கப்பட்டால், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் துணை நிற்கும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நாடு முழுவதும் நடந்தது. இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்காரணமாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது, மனசாட்சியை உலுக்கியது. கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, நடிகர் சூர்யா மீது நடத்தப்படும் தாக்குதல், உள்நோக்கம் கொண்டது என தெரிவித்தார்.
மேலும், கோபத்தால் சூர்யா அப்படி கூறியதாக ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் கூறியது சரியான தீர்ப்பு என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நடிகர் சூர்யா மீது குறி வைக்கப்பட்டால், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…